மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் தொகைய உடனே வழங்க கோரி மடத்துக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் தொகைய உடனே வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாதத்திற்கு மேல் கிராமப்புற 100 நாள் திட்ட தொழிலாளர்களின் சம்பளம் உடனே வழங்க வேண்டும், சட்டக் கூலி 294 வழங்க வேண்டும், வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், வேலை செய்யும் இடத்தில் அனைத்து தொழிலாளர்களையும் சமமாக பாகுபாடு இன்றி நடத்த கோரியும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கார்த்திகேயன் மற்றும் பழனிச்சாமி, சௌந்தரராஜன், சுப்பிரமணியம், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளம் தொகைய உடனே வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாதத்திற்கு மேல் கிராமப்புற 100 நாள் திட்ட தொழிலாளர்களின் சம்பளம் உடனே வழங்க வேண்டும், சட்டக் கூலி 294 வழங்க வேண்டும், வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும், வேலை செய்யும் இடத்தில் அனைத்து தொழிலாளர்களையும் சமமாக பாகுபாடு இன்றி நடத்த கோரியும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கார்த்திகேயன் மற்றும் பழனிச்சாமி, சௌந்தரராஜன், சுப்பிரமணியம், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.