உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர் : அடிப்படை பிரச்னைக்கு தீர்வு கோரி உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காலி குடங்களுடன் போராட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊராட்சியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணக்கோரி காலிக்குடங்களுடன் கண்டனஆர்ப்பாட்டம். ஜல்லிபட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. உடுமலைஒன்றிய கமிட்டி உறுப்பினர் மாசானி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி கமிட்டிஉறுப்பினர்கள் குமரகுரு, அஜித்குமார், மாதர்சங்கம் கமிட்டி கஸ்தூரி, வி.தொ.ச.செயலாளர் ரங்கராஜ், சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், முன்னாள் உடுமலைதாலூகா செயலாளர் கி.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஜல்லிபட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். புதுக்காலனி, வெங்கடேசாகாலனியில் வசிக்கும் மக்ககளை காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் போக்கோடு செயல்படும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு 3 மாதகாலமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது அநியாயம். உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.



50 பெண்கள் உட்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...