கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கோவை மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரிஅவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33) கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் *கவின் குமார் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்சப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...