கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கோவை மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரிஅவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33) கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் *கவின் குமார் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்சப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரிஅவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33) கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் *கவின் குமார் (21)ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்சப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.