போர் தொடுத்து வரும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிர்ப்பு – திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொடூர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் ராணவத்தை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதல்கலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு - ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 7- ந் தேதி தொடங்கி கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேலிய இராணுவம் கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சட்டங்களை மதிக்காமலும், மனித உரிமைகளை புறந்தள்ளி, கொடூரமான இன அழிப்பு முன்னெடுத்து வரும் இஸ்ரேலையும், அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்தும், திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் ஷாஹின்பாக் போராட்டக் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தை கண்டித்தும், அமெரிக்கா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...