ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் பெறுவதே சந்தேகம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்று கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சேலம் இரும்பு ஆலையை தனியார் மையாமாக மாற்றகூடாது. லாபகரமாக நடக்கும் இந்த இரும்பு ஆலையினை தனியாருக்கு கொடுத்தால் சேலத்தில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கும்.

ஆர்.கே. நகரில் தி.மு.க. அமோக வெற்றி பெரும். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். 

மே 16-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவ்வாறு நடைபெறுமானால் ஆளும் கட்சியால் ஒரு பஞ்சாயதில் கூட வெற்றி பெற முடியாது. 

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம்.  அத்தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது தமிழக தேர்தல் ஆணையம் அலட்சிய போக்கை கைவிட்டு பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும்  பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...