கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை - சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு சென்று விடுவேன் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக கட்சியை சேர்ந்த கனகராஜ் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சூலூர் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த கல்குவாரியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கனகராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், கல்குவாரியில் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். இந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழக்க வேண்டியிருக்கும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள நான் வேறு அணிக்கு சென்றுவிடுவேன் அல்லது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் எதற்கு எனக்கு பதவி என கேள்வி எழுப்பிய அவர், வேறு அணிக்கு சென்றலாலும் சென்றுவிடுவேன் எனவும், எதை பற்றியும் எனக்கு கவலையில்லை எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஏற்கனவே 135 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...