திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே படுகை பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபட்டு வந்த கூலி தொழிலாளியை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: தொடர்ந்து சேவல் திருடு போவதாக சிவக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் சேவலை திருடிய கருப்பணன் மகன் முருகனை, தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே உள்ள படுகை பகுதியில் அடிக்கடி சேவல்கள் களவு போவது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று படுகைக்கை பகுதியில் சிவகுமார் என்பவர் தோட்டத்தில் இரண்டு சேவல்கள் திருட்டுப் போனதையடுத்து, இது குறித்து சிவகுமார் என்பவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபடும் நபர்களை குறித்து அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் முருகன்( 55) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஆய்வாளர் கருப்பணன் மகன் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே உள்ள படுகை பகுதியில் அடிக்கடி சேவல்கள் களவு போவது தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று படுகைக்கை பகுதியில் சிவகுமார் என்பவர் தோட்டத்தில் இரண்டு சேவல்கள் திருட்டுப் போனதையடுத்து, இது குறித்து சிவகுமார் என்பவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் சாரிடம் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சேவல் திருட்டில் ஈடுபடும் நபர்களை குறித்து அப்பகுதியில் விசாரனை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தாராபுரத்தை அடுத்த தாளக்கரை பகுதியை சேர்ந்த கருப்பணன் மகன் முருகன்( 55) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஆய்வாளர் கருப்பணன் மகன் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.