திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஓன்றியம் வாகத் தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வி. வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில் தொழவு, வி.வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை நெகமம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதால் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடை அமைவதால் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை டி எஸ் பி சுகுமாரன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை இடமாற்றம் செய்யபடும் என உறுதி அளிக்கபட்டதால் தற்காலிமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அரசு மதுபான கடை திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை நெகமம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கபட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஓன்றியம் வாகத் தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வி. வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில் தொழவு, வி.வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை நெகமம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதால் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடை அமைவதால் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை டி எஸ் பி சுகுமாரன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை இடமாற்றம் செய்யபடும் என உறுதி அளிக்கபட்டதால் தற்காலிமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அரசு மதுபான கடை திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை நெகமம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கபட்டது.