மலேசியாவில் உள்ள தனது மனைவியை மீட்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

மலேசியாவில் உள்ள தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: மலேசியாவில் சிக்கியுள்ள தனது மனைவியை மீட்க வலியுறுத்தி தனது குழந்தைகளுடன் கணவர் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் தனலட்சுமி பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மலேசியாவில் வீட்டு வேலைக்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதை தொடர்ந்து ஏஜென்ட் ஒருவர் மூலம் ஒன்றரை லட்சம் செலவு செய்து மலேசியா சென்றுள்ளார். ஆனால் ஏஜென்ட் கூறியது போல வேலை வழங்காமல் அதிக வேலை வாங்கியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே வேளையில் சரவணன் தனலட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி வர வலியுறுத்தியுள்ளார். ஆனால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே இந்தியா செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.



மாற்றுத்திறனாளியான தன்னால் தனது மகள் மற்றும் மகள் ஆகியோரை கவனிக்க முடியாதால் தனது மனைவியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...