பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று BED யில் 50% மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் TNTET PAPER II (Teacher Eligihility Test Certificate) பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 53 (பொதுப் பிரிவினர்) 58(இட ஒதுக்கீட்டில் அடங்கும் ஆதரவற்ற விதவை உட்பட அனைத்து பிரிவினருக்கும்). இதர தகுதிகளின் விவரங்களை (http//www.trb.tn.gov.in என்ற இணையதன் முகவரியில் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test); வாரத்தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதால் 10.11.2023 தேதிக்குள் நேரிலோ அல்லது Google Link https//formsgle:FNHXWyiuCraG1AoL8 வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...