வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை பலி

வால்பாறையை அடுத்துள்ள சக்தி எஸ்டேட் அறுகாமையில் உள்ள மகாலட்சுமி எனும் எஸ்டேட் பகுதியில் ஏலக்காய் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் ஊடுறுவி பயிர்களை சேதம் செய்துவிடுவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.



இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.



முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...