வால்பாறையை அடுத்துள்ள சக்தி எஸ்டேட் அறுகாமையில் உள்ள மகாலட்சுமி எனும் எஸ்டேட் பகுதியில் ஏலக்காய் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் ஊடுறுவி பயிர்களை சேதம் செய்துவிடுவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.

முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

இந்நிலையில், மகாலட்சுமி எஸ்டேட் ஏலக்காய் தோட்டத்தில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்போது எஸ்டேட் பணியாளர்கள் அப்பகுதியில் சோதனையிட்டபோது அங்கு ஒரு யானை இறந்துகிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் சக்திவேல் மற்றும் சந்திரன், கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தி, பின் யானையில் உடலை சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டுச்சென்றனர்.

முன்னதாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை இறந்து 10 நாட்களுக்கும் மேலாகியிருக்கும். தற்போது வன விலங்குகளுக்கு உணவாக இதனை இங்கேயே விட்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.