கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை

கோவையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரங்கசாமி மகன் முருகேசன் (27) மற்றும் முத்து மகன் சுப்பிரமணி (43) ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகேசன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான சுப்பிரமணிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கினை புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆஜர்படுத்தினார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...