புதர் மண்டிக்கிடக்கும் கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் கழிவு நீர் மற்றும் மண்டிக்கிடக்கும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: ரயில்வே கேட்டு அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.



ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.



இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...