உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் கழிவு நீர் மற்றும் மண்டிக்கிடக்கும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: ரயில்வே கேட்டு அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.

ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.

இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.
ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.
இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.