முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்கள் - சிறைபிடித்த காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய கனரக வாகனங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் லாரிகள் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டன.


 திருப்பூர்: உடுமலை அருகே முறைகேடாக கிராவல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முறைகேடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சி உட்பட்ட துணை பாறை அருகில் சீத்தாமடை குட்டை உள்ளது. முறையாக அனுமதி பெறாமல் இந்த குட்டையில் இருந்து கடந்த சில நாட்களாக டிப்பர் லாரிகள் மூலமாக கிராவல் மண்ணை அள்ளிச் சென்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படும் சூழல் உருவானது. மேலும் வனப்பகுதியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குட்டையில் மண் அள்ளப்படுவதால் அரிய வகை உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.



இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மண்ணை அள்ளுவதற்காக வந்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும் இது குறித்த தகவல் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மற்றும் அமராவதி போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் இனிமேற்கொண்டு கிராவல் மண்ணை எடுக்கக்கூடாது என்றும், தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கிராவல் மண்ணை எடுக்க வந்த லாரிகள் திரும்பிச் சென்றன. விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...