தீபாவளி போனஸ் கேட்டு கோவையில் எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.


கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கட்டட தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.



தமிழ்நாடு எஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் மற்றும் தீபாவளி போனஸ் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது.



இந்தப் போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரிய கூட்ட முடிவுப்படி 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.



மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தமிழ்நாடு எஐடியுசி அமைப்பினர் கோவை பழைய தபால் நிலையத்தில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மேற்கொண்டனர்.



முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...