ஸ்மார்ட் சிட்டியின் குப்பைத் தொட்டிகளா இவை?

விரைவில் ஸ்மார்ட் சிட்டியாகயாக உருவாக இருக்கும் கோவை மாநகரை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. குளங்களை மேம்படுத்துதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், மொபைல் டாய்லெட்டுகள், பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்தல் என பல்வேறு திடங்களை அடுக்கிகொண்டே போகலாம்.



ஆனால், கோவை மாநகரின் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளைத் தான் கண்டு கொள்ள ஆள் இல்லை.



இன்று பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் உபயோகிக்க முடியாத நிலையில் கிடக்கின்றன. பல ஆண்டுகளாக மழை மற்றும் வெயிலில் காய்ந்ததால் துருப்பிடித்து உடைந்து காணப்படுகின்றன. உடைந்து போன குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் இடும் குப்பைகள் வீதிக்குள் வலம் வருகின்றன.



அவற்றுள் ஒரு எடுத்துக்காட்டே கோவை ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் வழியில் வகைப்பட்டுள்ள குப்பை தொட்டி.



எது குப்பை, எது குப்பைத் தொட்டி என கண்டறியவே முடியாதவாறு இந்த குப்பைத் தொட்டி படு மோசமான நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி, காமராசர் சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளும் இதே நிலை தான் உள்ளன.

மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளிலும், குறைவான மக்கள் தொகை கொண்ட இடங்களிலும் ஒரே அளவிலான குப்பைத் தொட்டிதான் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் குப்பை தொட்டி நிறையும் போது, குப்பைகளை மக்கள் சாலை ஓரமாக போட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மக்கள் மாற்றத்தை விரும்பி வரும் இந்த நேரத்தில் அரசும் இது போன்ற பிரச்சனைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாற்றம் அதிகாரிகளிடம் வர வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...