கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் எச்சரித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை பச்சைநிற குப்பைத் தொட்டிகளிலும், மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்/ நிறுவனங்களில் முறையாக வைத்து பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவை மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின் பங்களிப்பை முக மலர்ச்சியுடன் செய்து தர கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை பச்சைநிற குப்பைத் தொட்டிகளிலும், மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்/ நிறுவனங்களில் முறையாக வைத்து பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவை மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின் பங்களிப்பை முக மலர்ச்சியுடன் செய்து தர கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.