தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பூர்: வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்துள்ளார்.
தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர். அதற்கான தீர்வு கான வேண்டி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை நிறைவேற்றும் வகையில் பட்டா இல்லாத அனைத்து வீட்டிற்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி நகராட்சி தலைவர் மக்களின் கோரிக்கை மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சேர்த்து ஆர்.டி.ஓ.செந்தில் அரசனிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ. கூடிய விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ. காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது “ நகராட்சி தலைவர் மூலம் வீட்டு மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு தடை சான்று வழங்க நேரில் ஆய்வு செய்யப்பட்டு மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தாசில்தார் கோவிந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி உடன் இருந்தார்.
தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் மின்வசதி மற்றும் பட்டா இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர். அதற்கான தீர்வு கான வேண்டி நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை நிறைவேற்றும் வகையில் பட்டா இல்லாத அனைத்து வீட்டிற்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி நகராட்சி தலைவர் மக்களின் கோரிக்கை மனுக்களுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் சேர்த்து ஆர்.டி.ஓ.செந்தில் அரசனிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ. கூடிய விரைவில் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ. காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது “ நகராட்சி தலைவர் மூலம் வீட்டு மனைப்பட்டா மற்றும் மின் இணைப்பு தடை சான்று வழங்க நேரில் ஆய்வு செய்யப்பட்டு மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கையை கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது தாசில்தார் கோவிந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி உடன் இருந்தார்.