கோவை ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் தீ விபத்து - லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை அருகே உள்ள ஜான்சன் தொழில் நுட்ப கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது மின் கசிவு காரணமாக ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கிய 3 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என கூறப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.



கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பிற்பகலில் கரும்புகை வெளியேறியது. உடனடியாக கல்லூரி வளாகத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆடிட்டோரியத்துக்குள் சென்ற மூவருடைய நிலை குறித்து தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில் விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...