தன்னார்வலர் மற்றும் மாநகராட்சியால் சுத்தமான கோவை செல்வ சிந்தாமணி குளம்

கோவையில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற குளங்களில் ஒன்று செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம். இக்குளமானது கடந்த சில வருடங்களாக சரியான பராமறிப்பின்றியும், ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.



இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.



அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 



மேலும், அப்பகுதியில், கழிவரை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியிலும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.



இதனிடையே, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், குளம் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட வந்தநிலையில், கரையோரத்தில் செயல்பட்டு வரும் இரசாயன தொழிற்சாலையினால் தான் இக்குளம் அதிகப்படியாக பாதிக்கப்படுகிறது என அறிந்து அந்த தொழிற்சாலைக்கு நோட்டிஸ் கொடுக்கச்சொன்னார்.

மேலும், தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட கழிப்பறையில்லாதோர் பட்டியலைப் பெற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை பேற்கொண்டு தனித்தனி கழிப்பறைகளையும், பொதுக்கழிப்பறையும் கட்டித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...