கோவையில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற குளங்களில் ஒன்று செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளம். இக்குளமானது கடந்த சில வருடங்களாக சரியான பராமறிப்பின்றியும், ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.

அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதியில், கழிவரை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியிலும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், குளம் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட வந்தநிலையில், கரையோரத்தில் செயல்பட்டு வரும் இரசாயன தொழிற்சாலையினால் தான் இக்குளம் அதிகப்படியாக பாதிக்கப்படுகிறது என அறிந்து அந்த தொழிற்சாலைக்கு நோட்டிஸ் கொடுக்கச்சொன்னார்.
மேலும், தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட கழிப்பறையில்லாதோர் பட்டியலைப் பெற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை பேற்கொண்டு தனித்தனி கழிப்பறைகளையும், பொதுக்கழிப்பறையும் கட்டித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை சுத்தம் செய்ய கோவை மாவட்டதைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த நிலையில் இதற்கு ஆதவளிக்கும் வகையில் கோவை மாநகராட்சியும் குளத்தினை தூர்வாறும் பணியில் கைகோர்த்தது.

அதன்படி, இன்று தன்னார்வலர்களும், மாநகராட்சி பணியாளர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து செல்வ சிந்தாமணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதியில், கழிவரை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியிலும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், குளம் சுத்தம் செய்யும் பணிகளை பார்வையிட வந்தநிலையில், கரையோரத்தில் செயல்பட்டு வரும் இரசாயன தொழிற்சாலையினால் தான் இக்குளம் அதிகப்படியாக பாதிக்கப்படுகிறது என அறிந்து அந்த தொழிற்சாலைக்கு நோட்டிஸ் கொடுக்கச்சொன்னார்.
மேலும், தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட கழிப்பறையில்லாதோர் பட்டியலைப் பெற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை பேற்கொண்டு தனித்தனி கழிப்பறைகளையும், பொதுக்கழிப்பறையும் கட்டித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.