கோவையில் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் கோவையில் நடைபெறும் திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரிசெல்வன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தின் துவக்கத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது குறித்தும், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.



முன்னதாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிசெல்வன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...