ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நொய்யலை மீட்க பொதுமக்கள் கோரிக்கை


கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குவது, நொய்யல் ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.



இதே நதியில், 32 காட்டாற்று ஓடைகள் கலக்கின்றன. கோவையைச் சுற்றியுள்ள, 19 குளங்களை நிறைத்த பின், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 160 கிலோ மீட்டர் பயணித்து, நொய்யல் என்ற கிராமத்தில், காவிரியில் கலக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.



நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இவற்றில், வாலாங்குளத்தில் இருந்த சில நூறு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டு, அங்கிருந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு குளங்கள், ஆற்றுப்பாதைகள், வாய்க்கால் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நொய்யல் நதியில் மீண்டும் அத்துமீறி  ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருகிறது.

சில அரசியல்வாதிகளின் பெயர்களை கூறியே இவ்வாறான தவறுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் கடிதம் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்து நொய்யலை மீட்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...