திருப்பூர் மாவட்டத்தில் ஓராண்டில் 111 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 13 பேர் மீது வழக்குப்பதிவு

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஓராண்டு மட்டும் 111 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.



திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகளின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் மூத்த பத்திரிகையாளர் மணி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் போது ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் குழந்தைகளுக்கான எதிரான குற்றங்கள் நடைபெறும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் குழந்தை குற்றங்களை தடுக்க வேண்டிய நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்து ஓர் ஆண்டில் மட்டும் 111 குழந்தை திருமணங்கள் குற்றம் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இதில் 90-க்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதோடு 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் ஆறு வழக்குகளுக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஊடகங்கள் இது குறித்த செய்திகளை வெளியிடும்போது பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...