ராசிபாளையத்தில் கலையரங்கம் திறப்பு விழா - எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி பங்கேற்பு

பொதுமக்கள் விழா நடத்த, கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்தலாம் என்றும், ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே ராசிபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாடுக்காக கலையரங்கத்தை சூலூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7,10,000/- மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது.



இதன் திறப்புவிழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்.

சூலூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.குமரவேல், ராசிபாளையம் ஊராட்சி தலைவர் கவிதா ஆகியோர் வரவேற்றனர்.



சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பேசும்போது, பொதுமக்கள் விழா நடத்த , கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஊரின் வளர்ச்சிக்கு இந்த கலையரங்கம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சூலூர் கார்த்தி, கூட்டுறவு சங்கதலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...