தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறைத் தலைவர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். ஊழலை ஒழிப்பதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ரா.சிவசாமி சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் ரா.சிவசாமி கூறியதாவது, சிறப்புரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...