கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 11 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 35 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாலும், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காகவும் அல்லி என்ற அப்துல் ரஹ்மான் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான அல்லி என்ற அப்துல் ரஹ்மான் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 11 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 35 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாலும், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காகவும் அல்லி என்ற அப்துல் ரஹ்மான் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப. பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான அல்லி என்ற அப்துல் ரஹ்மான் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 11 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 35 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.