கோவையில் உள்ள மழைநீர் வடிகால்கள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட எம்.எஸ்.அவென்யூ, குறிச்சி பிரிவு, போத்தனூர் பிரதான சாலை, உமர் நகர் மற்றும் LLYODS அவென்யூ ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரவும், சேதமடைந்த சாலையை சரிசெய்யவும், பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் பாலம் அமைத்து, சாலையை சரிசெய்யவும், மழைநீர் வடிகால் தூர்வாரிடவும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வார உரிய திட்டமதிப்பீடு தயாரித்திடவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்பு,



பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் உள்ள பதிவேடுகள், உணவு பொருட்களின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை, கோவைப்புதூர் பிரிவு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, அப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, அப்துல் காதர், இளஞ்சேகரன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சபரிராஜ். சதீஸ்குமார், சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...