பல்லடம் வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் - முன்னாள் எம்பி அர்ஜுனன் பங்கேற்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் நிர்வாகிகளுஃகு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவர்களின் தலைமையில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் எம் எஸ் எம் ஆனந்தன் எம் எல் ஏ அவர்களின் முன்னிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு நேரில் பூத் கமிட்டி நோட்டுகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.



இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன், இளைஞரணி மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் எனவும், அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...