அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று கடை அகற்றப்படும் என காவல்துறை அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கோவை: கோவையில் பகுதியில் புதிதாக மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை P.N.புதூர் பகுதியில் புதிதாக திறந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 41-வது மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடந்த வருடமே மருதமலை மெயின் ரோடு P.N.புதூர் மயானத்தின் பின்புறம் மதுபானக்கடை வருவதை அறிந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரை அணுகியதால் போராட்டம் நடைபெறும் நேரத்தில் காவல்துறை முன்னிலையில் இட உரிமையாளர் கடை வராது என உறுதிமொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் இந்த வருடம் (2023) ஆகஸ்ட் மாதம் மீண்டும் கடை திறக்கும் வேலைகள் நடைபெறும் பொழுதில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டு அனைத்து அதிகாரிகளையும் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து புகார் மனுவாக கொடுத்தும், அதிகாரிகளும் கடை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய நிலையில் இன்று மதியம் திடிரென காவல்துறையை குவித்து கடையை திறந்து விட்டதை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கோவை P.N.புதூர் பகுதியில் புதிதாக திறந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 41-வது மாமன்ற உறுப்பினர் K.சாந்தி சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடந்த வருடமே மருதமலை மெயின் ரோடு P.N.புதூர் மயானத்தின் பின்புறம் மதுபானக்கடை வருவதை அறிந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரை அணுகியதால் போராட்டம் நடைபெறும் நேரத்தில் காவல்துறை முன்னிலையில் இட உரிமையாளர் கடை வராது என உறுதிமொழி கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இந்த வருடம் (2023) ஆகஸ்ட் மாதம் மீண்டும் கடை திறக்கும் வேலைகள் நடைபெறும் பொழுதில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டு அனைத்து அதிகாரிகளையும் தொடர்ச்சியாக நேரில் சந்தித்து புகார் மனுவாக கொடுத்தும், அதிகாரிகளும் கடை வராமல் பார்த்துக் கொள்கிறோம் என கூறிய நிலையில் இன்று மதியம் திடிரென காவல்துறையை குவித்து கடையை திறந்து விட்டதை அறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்த்து வைப்பதாக உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.