தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணிக்க தனிப்படை

தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் முக்கிய கடைவீதி பகுதியான ஒப்பணக்கார வீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூத்தாடைகளை வாங்கி வருகின்றனர். ஏராளமானோர் குவிந்து வருவதால் அப்பகுதியில் மாநகர காவல் துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே அப்பகுதியில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,



தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கிகள் மூலம் கூட்டத்தை கண்காணிப்பதாகவும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வழிப்பறி பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களின் புகைப்படங்களை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்ட நெரிசல் இருக்கக்கூடிய கடைவீதி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தலா மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் அத்து மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக முழுவதும் பெண் காவலர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சூழலில் இந்த ஆண்டும் அது போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த விதத்திலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...