கோவையில் கறிக்கோழி விற்பனையாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி - சென்னை வியபாரி கைது

கொள்முதல் செய்த கறிக்கோழிக்கு தரவேண்டிய ரூ.47 லட்சம் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாக இருந்த செந்தில் மோகன் என்ற கறிக்கோழி வியபாரியை, தனிப்படையினர் சென்னையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில் மோகன் என்பவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வி எம் சி புரோட்டீன் என்ற பெயரில் கறிக்கோழி விற்பனை மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதற்கான உயிர் கறிக்கோழிகளை கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்பூர் சிக்கன் என்ற நிறுவனத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவில் இருந்த செந்தில் மோகன் கடந்த ஒரு ஆண்டாக கொள்முதல் செய்யும் கறிக்கோழிக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதை அடுத்து கறிக்கோழி மொத்த விற்பனை மைய மேலாளர் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்துமாறு கூறவே திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதை தொடர்ந்து சுமார் 47 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த செந்தில் மோகனை கைது செய்து பணத்தை மீட்டு தருமாறு கூறி அந்நிறுவன மேலாளர் பாலகுமாரன் என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தலைமறைவான செந்தில் மோகனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் மோகன் சென்னையில் இருப்பது தெரிய வந்த நிலையில் சென்னை சென்ற தனிப்படையினர் செந்தில் மோகனை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில்15 நாள் காவலில் செந்தில் மோகன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...