கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும், மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும், மழைக்கால நிவாரண நிதியாக 8000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும், மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும், மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு ஆணை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



இந்த மனு இச்சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய ராஜகோபால், தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும் மண் அடுப்பையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். மேலும் மழைக்கால நிவாரண நிதியாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாயை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் இதன் மூலம் பழங்கால தொழில் ஊக்குவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



மனு அளிக்க வந்த அவர்கள் மண்பானையையும் மண் அடுப்பையும் தலையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...