விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - மடத்துக்குளத்தில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அறிவுரை

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கூறினார்.


திருப்பூர்: விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் மடத்துக்குளத்தில் நடைப்பெற்ற விளையாட்டு விழாவில் அறிவுரை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஜே எஸ் ஆர் கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜே எஸ் ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவில் ஸ்டாலின் நாகராஜ் அவர்கள் பேசும் பொழுது.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் இந்தியாவில் உயிரிழந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் கூட கொரனாவால் உயிர் இழக்க வில்லை காரணம் விளையாட்டு தான் மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி சாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார் .

விளையாட்டு விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் நாகராஜன் ஏற்றுக்கொண்டார் . பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர்கள ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வலம் வந்தனர்.



மழலையர் குழந்தைகளின் உடற்பயிற்சி, வண்ணமயமான பாராசூட் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் டான்ஸ், சிலம்பம் யோகா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...