குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடை - உரிய நடவடிக்கை கோரி ஒருங்கிணைப்புக்குழு மனு

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் அரவான் திருவிழாவிற்கு தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்துள்ளது.


கோவை: குறிச்சி அரவான்திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும்அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக 16 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்த அரவான் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இந்தத் திருவிழாவை நடத்த வேண்டிய நிர்வாகிகளில் ஒரு சிலர் தடையாக இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டியும் குறிச்சி அரவான் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்த அவர்கள் அளித்துள்ள மனுவில், இந்த திருவிழா நடத்துவதற்கு கூட்டத்தை அறிவிக்க வேண்டிய ஊர் கவுண்டர் பத்மகுமார் அவர் சொல்லும் படியாக மற்ற சமூகத்தினர்கேட்டால் மட்டுமே தேதியை அறிவிப்பேன் எனக் கூறுவதாகவும் கணக்குப் பிழையான மரகதம் பிள்ளை தனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்கிறார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேவர் சமூகத்தில் மூன்று பேர் நாங்கள் தான் தேவர் சமூகப் பிரதிநிதி(முக்கந்தர்) என்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த நபர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் திருவிழா நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்கள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



எனவே திருவிழாவிற்கு தடையாக உள்ள இவர்களை முறையாக விசாரித்து திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...