அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி - எனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் சாமிநாதன் பல்லடத்தில் பேட்டி

செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர் :அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் திருப்பூரில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கோடங்கிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரணம்பேட்டையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் எட்டு வருடங்கள் ஆகியும் எந்த பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாததால் பயன்பாடு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.



இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார், ஊராட்சி தலைவர், ஆகியோர்செயல்படாமல் பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர்.



செயல்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை உழவர் சந்தையாகவோ, ஜவுளி சந்தையாகவோ மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில்,



செயல்படாமல் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தினை பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் எனக்கு தெரியாது எனவும் ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிடுகிறார்கள் எனவும் தெரிவித்தார். அதே போன்று சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கன்னத்திற்குரியது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த செய்தியும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...