தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பேருந்து நிலையங்கள் மாற்றம்

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.


கோவை: வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவர். இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் திருப்பூர் ஈரோடு ஆனைகட்டி மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக கோவை மதுரைக்கு 100 பேருந்துகள், கோவை திருச்சிக்கு 80 பேருந்துகள், கோவை தேனிக்கு 50 பேருந்துகள், கோவை சேலத்திற்கு 60 பேருந்துகள் என சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவை வரும் 9ம் தேதி முதல் 11ம்தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...