எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் பெயரில் மோசடி - கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார்

5 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்ததாக பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் எனக்கூறி 5 கோடி நிலம் மோசடி செய்ததாக கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் எனக் கூறி 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த் மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத்தும் அனுமதிற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது. 2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

இதனால் எங்களுடைய மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது இந்த நிலங்களுக்கு எந்த விதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர் பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது. மணி கவுண்டர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...