சிலை திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

அன்னூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சிறுமுகை அடுத்த ஆணைப்பள்ளி புதூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு குழதெய்வமாக இருக்கக் கூடிய இந்த கோவிலின் மூலவரான கருப்பராயன் சிலையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கடத்திச் சென்றனர்.

இது குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறுமுகை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறையின போதிய அக்கறையின்றி அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆணைப்பள்ளி புதூர் கிராம மக்கள் இன்று கோவில் அருகே திரண்டு சாமி சிலையை கடத்தியவர்களை கைது செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத சிறுமுகை காவல்துறையினரை கண்டித்தும் அன்னூர் சிறுமுகை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும், சிலை கடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அன்னூர்- சிறுமுகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...