தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

மழை நீர் வடிகால் அமைத்தல், நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பணிகளான சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...