கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் - கோவை காவல் துணை ஆணையர் அறிவுரை

ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கல்லூரி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்திட வேண்டும் என கோவை காவல் துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்

கோவை பிபிஜி கல்லூரி வளாகத்தில், உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.

இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின், தனியார் கல்லூரி மாணவர் ராக்கிங் செய்து தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை.ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துகல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்வதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் ஒருவர் மீது வழக்கு பதிவாகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற தடையாக அமையும் என்பதால் கல்லூரி மாணவர்கள் இதுபோன்றுராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாகஉள்ளதாகவும் எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...