கவுண்டம்பாளையத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிய ஆட்சியர்

கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கவுண்டம்பாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு கிடங்கு வளாகத்தையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மூவர் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்களையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வரும் அம்ரித் சிறப்பு மையத்தில் பார்வையிட்டு அங்குள்ள வசதிகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.



பின்னர் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முதியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட வளங்கள் அலுவலர் குணசேகரன், வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...