நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் காற்றாலை மின்கம்பங்கள் - தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் அணை நீர்வழிப் பாதையில் தனியார் காற்றாலை சார்பில் மின்கம்பங்கள் அமைப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழை நீர் அதிக அளவில் வரும்போது நீர் வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்கம்பங்கள் மழை நீரில் அடித்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நீர்வழி பாதையில் உள்ள கருவேல முட்களை வெட்டி நீர்வழிப் பாதையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர் மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்தில் கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...