நல்லதங்காள் அணை நீர்வழிப்பாதையில் காற்றாலை மின்கம்பங்கள் - தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லதங்காள் அணை நீர்வழிப் பாதையில் தனியார் காற்றாலை சார்பில் மின்கம்பங்கள் அமைப்பு தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் நல்லதங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழை நீர் அதிக அளவில் வரும்போது நீர் வழித்தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்கம்பங்கள் மழை நீரில் அடித்துச் சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நீர்வழி பாதையில் உள்ள கருவேல முட்களை வெட்டி நீர்வழிப் பாதையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர் மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்தில் கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...