கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்..

இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகாட்சி பொது நிதியிலிருந்து சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 88வது வார்டு, அரசு அலுவலர் காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 92வது வார்டு, பாலக்காடு பிரதான சாலை, நரசிம்மபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரசிம்மபுரம் பகுதியில் உள்ள செங்குளம் மயானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே.புதூர் மற்றும் சுகுனாபுரம் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார்..

இந்நிகழ்ச்சிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.