உடுமலை அருகே வீட்டின் பூட்டைஉடைத்து 15 பவுன் நகை திருட்டு - காவல்துறை விசாரணை

உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: வீட்டின் கதவு பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்

உடுமலை அடுத்த எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள கொங்குரார் லே-அவுட்டை சேர்ந்தவர் நாகராஜன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு திருமூர்த்திநகரில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார்.

இவர் குடியிருந்து வரக்கூடிய வீட்டு உரிமையாளரும் மூன்று நாட்களுக்கு முன்னரே மடத்துக்குளத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கேட் மற்றும் வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டேபிளில் இருந்த 3¾ பவுன்நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

அதன்பின்பு கீழ்தளத்துக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதை உரிமையாளர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 நகைகள் திருடு போனது. ஆக மொத்தம் 15 ¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகராஜன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...