உடுமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி வரும் அவலம் - பாதை அமைத்து தரக்கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை ஈசல்தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவட்டப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகள் வனத்துறை, வருவாய் துறை,தன்னார்வலர்கள் சார்பில் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ஆனால் இன்றளவும் பாதை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி அடைவதற்கு வழிவகை பிறக்கவில்லை. இதனால் பிரசவம்,அவசரகால உதவி, விபத்து, ஏதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற்றால் சிகிச்சைக்கு அடிவாரப் பகுதிக்கு வருவதற்குள் மலைவாழ் மக்கள் மறு ஜென்மம் எடுத்து விடுகின்றனர்.



பாதை வசதி இல்லாததால் உயிரைக் காக்க உயிரை பணயம் வைத்து நோயால் பாதிக்கப்பட்ட நபரை அடர்ந்த வனப்பகுதிக்குள் தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

பின்னர் வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு பாதை வசதி அமைப்பதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்குவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை தேவையான பாதை வசதி பூர்த்தி அடைந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த ஒரு தேவையும் காலத்தே செய்து கொள்ள இயலும். எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...