திருப்பூரில் விடிய விடிய பெய்த மழை - சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி

கனமழை காரணமாக பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, அதில் இருந்து தண்ணீர் சாலைகளில் சென்றது. இதனால், சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிப்பதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அளித்துள்ளார்.



இந்த நிலையில் இரவு பெய்த கனமழையின் காரணமாக ரோடுகளின் அனைத்து பகுதிகளும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது.



திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட தோட்டத்து பாளையம் பகுதியில் மழை நீரின் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீரினால் சூழப்பட்டுள்ளது.



அதேபோல பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பியதால் அதிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் சாலைகளின் வருகிறது.



இதனால் அப்பகுதி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதகாரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி தங்கள் வாகனத்தை இயக்குகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வளம் பாலம் முழுவதுமே மழை நீரால் மறைந்துள்ளது. மழை நீர் வெள்ளம் போல செல்வதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் சாலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி செல்கிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...