பச்சை மலை எஸ்டேட் அருகே யானைகள் நடமாட்டம் உள்ள நகராட்சி பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.

பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.
பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.