தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி க.க.சாவடி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டாவை தகுதியானவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் க.க.சாவடி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-


நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...