இலவச வீட்டுமனை பட்டாவை தகுதியானவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் க.க.சாவடி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.