குழந்தைகளையும் விட்டுவைக்காத நீரிழிவு சக்கரை நோய் - கோவையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

குழந்தைகளில் 10 சதவீதம் பேர் டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக விழிப்புணர்வில் தெரிவிக்கப்பட்டது.


கோவை: நீரழிவு நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கோவையில் நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தால் நவம்பர் 14ல் "வேர்ல்ட் டயாபடீஸ் டே" நாளாக அறிவிக்கப்பட்டு, இந்த நாளில் நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் எஸ்.பி டயபட்டிக் ஃபவுண்டேசன் சார்பாக, நீரிழிவு சக்கரை நோய் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது.



நீரிழிவு சக்கரை நோய் தீர்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்ற அடிப்படையில் இந்த சைக்கிள் பயணம் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய நீரிழிவு சர்க்கரை நோயை சிகிச்சை நிபுணர் சுகுணா, உலக அளவில் நீரிழிவு சக்கரை நோய் பாதிப்பு அதிகரித்திருக்கின்றன. வயதானவர்களை பாதித்த இந்த நீரிழிவு நடுத்தர வயதுடையோர், இளைஞர் படாளத்தை கணிசமாக பாதித்தது. இந்த நிலையில் குழந்தைகளும் இந்த நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். உலக அளவில் இது காமன் டிசீஸ் என்று சொல்லும் அளவுக்கு நீரிழிவு நோய் சமுதாயத்துக்கு மாறி இருக்கின்றன.

இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றன. 50 சதவீதம் பேர் முறையான சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கின்றனர். சிகிச்சை எடுப்பவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உரிய மருந்துகளை உட்கொண்டும் மருத்துவர்கள் அறிவுரைகளையும் பின்பற்றுகின்றனர்.

வயதானவர்கள் வாலிபர்கள் மட்டுமின்றி தற்போது, 7 முதல் 10 வயது குழந்தைகளுக்கும் நீரிழிவு சர்க்கரை அதிகரித்திருக்கின்றன. டைப் 1 டயாபடீஸ் 10ல் 1 குழந்தைக்கு இருந்த நிலையில், தற்போது குழந்தைகளின் 10 சதவீதம் பேருக்கு டைப் 2 டயாபடீஸ் இருப்பதாக இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன் அமைப்பின் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

மனிதர்களுக்கு பொதுவாக நீரிழிவு நோயின் தாக்கம் ஆரம்பத்தில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அதன் வீரியம் அதிகமாகும் பொழுது, கண் குறைபாடு, கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளில் ஆரம்பித்து சிறுநீரகமனித உடலுக்கு பிரச்சனை ஏற்படும் அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும். சமுதாயத்தில் மாறிவரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை நீரிழிவுக்கு அடிப்படை என்பதனால், துரித உணவை தவிர்த்து சரி விகித நிலையில் சத்தான உணவை உட்கொள்ளுதல், நல்ல உறக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...